இளையான்குடி,
முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து இளையான்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளையான்குடி நகர் தலைவர் முகம்மது சமீம் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட செயலாளர் அப்பாஸ் அலி கண்டன உரை நிகழ்த்தினார். சதாம் உசேன், முகமது அசார் ஆகியோர் கண்டன முழக்கமிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள், ஜமாத்தார்கள், இளைஞர்கள்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர். நகர் செயலாளர் சேக் அபுபக்கர் சித்திக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.