மாவட்ட செய்திகள்

மதுரையில் நடந்த அதிரடி சோதனை இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3¼ கோடி தங்கம் சிக்கியது 3 பேர் கைது-பரபரப்பு தகவல்

இலங்கையில் இருந்து கொண்டு வந்து பதுக்கி வைத்திருந்த ரூ.3¼ கோடி கடத்தல் தங்கத்தை அரசு பஸ்சில் இருக்கைக்கு அடியே மறைத்து மதுரைக்கு எடுத்து வந்த போது, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கையில் இருந்து சென்னை, மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் சென்றன. இதன் தொடர்ச்சியாக இலங்கையில் இருந்து சென்னை, மதுரைக்கு வரும் விமான பயணிகளிடம் தீவிர சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களில் மட்டும் அதிக அளவில் தங்கம் பிடிபட்டது.