பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில், மத்திய மந்திரி அனந்தகுமார், முன்னாள் மத்திய மந்திரி ஜாபர்ஷெரீப், நடிகர் அம்பரீஷ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாநகராட்சி மன்றத்தின் 2-வது நாள் கூட்டம் மேயர் கங்காம்பிகே தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு கமிஷனர் ரன்தீப், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.