மாவட்ட செய்திகள்

மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் இது வரை 74 ஆயிரத்து 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக நெய்வேலி என்.எல்.சி.யை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது வரை 73 ஆயிரத்து 364 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதித்த 2 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.