மாவட்ட செய்திகள்

முதன்மை கல்வி அலுவலராக அனிதா பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா பொறுப்பேற்றார்.

சிப்காட் (ராணிப்பேட்டை)

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அனிதா பொறுப்பேற்றார்.

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த மதன்குமார் கரூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து சென்னை மாவட்டத்தில் இருந்து பணிமாறுதலாகி வந்த, ஆ.அனிதா இன்று ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

.