புதுச்சேரி

ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

புதுவையில் ஓட்டல் ஊழியரை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

ராமநாதபுரம் மாவட்டம் நைனார்குளம் பகுதியை சேர்ந்தவர் கங்குலி (வயது 24). புதுவை புதிய பஸ்நிலைத்தில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஓட்டலில் சாப்பிட வந்த ஒருவருக்கு சாம்பார் ஊற்ற சென்றுள்ளார். அப்போது போகிற வழியில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை கங்குலி வழியை விட்டு தள்ளி நிற்குமாறு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் எங்களையே தள்ளி நிற்க சொல்கிறாயா? என்று கூறி கங்குலியை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கங்குலியை தாக்கியது தேங்காய்திட்டை சேர்ந்த செந்தில், அவரது மகன் ஹரி என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து