புதுச்சேரி

ஐ.டி. நிறுவன ஊழியர் மீது தாக்குதல்

புதுவையில் ஐ.டி. நிறுவன ஊழியரை தாக்கிய மனைவி, மாமனார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

கோரிமேடு காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். ஐ.டி. நிறுவன ஊழியர். இவரது மனைவி விஜயபிரியா. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு முதல் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கணேஷ் வீட்டிற்கு சென்று விஜயபிரியா, அவரது தந்தை உதயக்குமார், உறவினர்கள் கணேசன், சத்யா ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கச்சென்ற கணேஷின் தந்தை குணசேகரனையும் தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கணேசை தாக்கிய மனைவி விஜயபிரியா, மாமனார் உதயக்குமார் மற்றும் கணேசன், சத்யா ஆகியோர் மீது கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்