புதுச்சேரி

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

காரைக்காலில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தினத்தந்தி

காரைக்கால்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட நலவழித்துறை, அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பேரணியை நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தேனாம்பிகை கலந்து கொண்டு, வீட்டையும், நாட்டையும் வலுப்படுத்த பெண்களின் ஆரோக்கியம் மிகவும் அவசியம்'என்றார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவ அதிகாரிகள், நலவழித்துறை ஊழியர்கள், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த சைக்கிள் பேரணி, காரைக்கால்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கப்பட்டு, முக்கிய மீனவ கிராமங்கள் வழியாக சென்று நிறைவடைந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்