மாவட்ட செய்திகள்

வாலாஜாவில் இரும்பு கம்பியால் அடித்து மேடை பாடகர் கொலை

வாலாஜாவில் மேடை பாடகர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலாஜா,

வாலாஜா தென்றல் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அசோக்குமார் (வயது 50), மேடை பாடகரான இவர் பாட்டு கச்சேரிகள் நடத்தியும், கச்சேரிக்கு ஏற்பாடுகள் செய்தும், அதே பகுதியில் பாடல் மற்றும் இசை கற்றுக்கொடுத்தும் வந்தார். இவரது மனைவி தனுஜாகுமாரி (43). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.