புதுச்சேரி

புதுச்சேரியில் இளங்கலை நர்சிங் பொது நுழைவுத் தேர்வு ரத்து - இந்திய செவிலியர் கவுன்சில் அறிவிப்பு

புதுச்சேரியில் 2023-24ம் கல்வியாண்டில் இளங்கலை நர்சிங் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

நடப்பு கல்வியாண்டியில் இளங்கலை நர்சிங் படிப்பிற்கு புதுச்சேரியில் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என இந்திய செவிலியர் கவுன்சில் உத்தரவிட்டது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த ஆண்டு நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய செவிலியர் கவுன்சிலுக்கு புதுச்சேரி அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து தற்போது புதுச்சேரியில் மட்டும் 2023-24ம் கல்வியாண்டில் பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக இந்திய செவிலியர் கவுன்சில் அறிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து