வணிகம்

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி அதிகரிக்கும் - ஆப்பிள் நிறுவனம்

ஐபோன் நிறுவனத்தின் முதலீட்டால் இந்தியாவில் வேலை வாய்ப்பு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்கா, சீனா நாடுகள் ஏற்றுமதி வரியை பரஸ்பரமாக உயர்த்தியுள்ளன. இதனால் இருநாடுகளுக்கு இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐபோன் நிறுவனம், சீனாவில்தான் தனது நிறுவன போன்களை பெருமளவு உற்பத்தி செய்தது.

ஆனால் சீனா, அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் தொடங்கிய நிலையில் சீனாவில் ஐபோன் உற்பத்திக்கான வாய்ப்பு குறைந்து உள்ளது. இந்தநிலையில் ஐபோன்கள் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் முடிவு செய்துள்ளார்.

அவர் கூறுகையில், "இனி அமெரிக்கர்கள் கைகளில் தவழ உள்ள ஐபோன்களின் பிறப்பிடமாக இந்தியா இருக்கும்" என்றார். இதனால், ஐபோன் நிறுவனத்தின் முதலீடு இந்தியாவில் அதிகரிக்கும் எனவும் வேலை வாய்ப்பும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து