வணிகம்

அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.3 ஆயிரம் கோடி உயர்வு

அன்னிய செலாவணி சந்தையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவின் அன்னிய செலாவணி சந்தையை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரியும்போது உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது.இந்நிலையில், கடந்த 9-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 39 கோடியே 20 லட்சம் டாலர் (சுமார் ரூ.3 ஆயிரம் கோடி) அதிகரித்துள்ளது.

அதன்மூலம் அன்னிய செலாவணி கையிருப்பு 68 ஆயிரத்து 719 கோடி டாலர் (ரூ.62 லட்சத்து 53 ஆயிரத்து 429 கோடி) என்ற நிலையை எட்டி உள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ந் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி கையிருப்பு 980 கோடி டாலர் சரிந்து காணப்பட்டது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு