சென்னை,
தங்கம், வெள்ளி விலையில் சமீபகாலமாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது. இந்த நிலையில், தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது. இதற்கு காரணம் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி (அடிப்படை சுங்கவரி 10 சதவீதம், வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி 5 சதவீதம் சேர்த்து) மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டதுதான். இந்த 9 சதவீத வரி உயர்வு நேற்று முதலே அமலுக்கு வந்து விட்ட காரணத்தினால், தங்கம், வெள்ளி மீதான விலையிலும் நேற்றே தாக்கம் எதிரொலித்துவிட்டது.
நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,070-ம், சவரனுக்கு ரூ.8,560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,400-க்கும், ஒரு சவரன் ரூ.1,23,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.15,000-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,000-க்கும் விற்கப்பட்டது.
வெள்ளி விலை நேற்று காலையில் கிராமுக்கு ரூ.30 உயர்ந்த நிலையில், மாலை கிராமுக்கு ரூ.10 குறைந்தது. நேற்று மாலை நிலவரப்படி, வெள்ளி ஒரு கிராம் ரூ.320-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,050-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.315-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.