வணிகம்

கடும் சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

மும்பை,

வாரத்தின் இறுதி நாளான இன்று (27.02.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதன்படி, 317 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 178 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 658 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 60 ஆயிரத்து 529 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேபோல், 440 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 869 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 961 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 287 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

161 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 491 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 697 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 68 ஆயிரத்து 139 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.