மாவட்ட செய்திகள்

சிக்கமகளூரு-உடுப்பி மலைப்பாதையில் பாறையில் பஸ் மோதி 9 பேர் சாவு சுற்றுலா சென்ற மைசூருவை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

சிக்கமகளூரு-உடுப்பி மலைப்பாதையில் பாறையில் சுற்றுலா பஸ் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா சென்ற மைசூருவை சேர்ந்தவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்து உள்ளது.

மங்களூரு,

சிக்கமகளூருவில் இருந்து உடுப்பிக்கு மலைப்பாதை செல்கிறது. இந்த மலைப்பாதையின் வழியாக தினமும் சிக்கமகளூருவில் இருந்து உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மலைப்பாதை மிகவும் குறுகியது ஆகும். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகின்றன.