மும்பை

புனே மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் குளோரின் வாயு கசிவு - 16 பேருக்கு உடல் நலம் பாதிப்பு

புனே மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் குளோரின் வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு 16 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது

தினத்தந்தி

புனே, 

புனே காசர்வாடி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் சுத்தம் செய்ய குளோரின் வாயு கொண்ட சிலிண்டர் பொருத்தப்பட்டு இருந்தது. நேற்று காலை 9 மணி அளவில் குளத்தில் இருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இந்த வாயுவை சுவாசித்ததில் அங்கிருந்த 16 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கசிவு ஏற்பட்ட சிலிண்டரை சீல் வைத்தனர். பின்னர் தண்ணீரில் மூழ்கடித்தனர். அங்கிருந்த மக்களை அவசரமாக வெளியேற்றினர். உடல் நலம் பாதித்த 16 பேரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த விபத்தில் உயிர் காக்கும் வீரர்கள் சிலரும் பாதிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து