புதுச்சேரி

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா - தமிழிசை சவுந்தரராஜன், முதல்-மந்திரி ரங்கசாமி கேக் வெட்டி கொண்டாட்டம்

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.

தினத்தந்தி

புதுச்சேரி,

உலகம் முழுவதும் நாளைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா களைகட்டியது. இதில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட கேக் தயார் செய்யப்பட்டிருந்தது. பின்னர் முதல்-மந்திரி ரங்கசாமி மற்றும் துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் இணைந்து கேக் வெட்டி அதனை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கினர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை