சினிமா செய்திகள்

நடிகை பாயல் கோஷ் இந்திய குடியரசு கட்சியில் இணைந்தார்

சினிமா இயக்குனர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை பாயல் கோஷ், இந்திய குடியரசு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தினத்தந்தி

மும்பை,

பிரபல இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது சமீபத்தில் பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்தி நடிகை பாயல் கோஷ். நடிகையின் புகார் குறித்து மும்பை போலீசார், அனுராக் காஷ்யப் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். முன்னதாக நடிகை பாயல் கோசுக்கு இந்திய குடியரசு கட்சி(ஏ) தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே ஆதரவு தெரிவித்து இருந்தார். மேலும் அவரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்று அவருக்கு நீதி கிடைக்க கர்வனர் பகத்சிங் கோஷ்யாரிடம் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் நேற்று மும்பையில் நடந்த விழாவில் நடிகை பாயல் கோஷ், ராம்தாஸ் அத்வாலே முன்னிலையில் இந்திய குடியரசு கட்சியில் இணைந்தார். கட்சியில் அவருக்கு மகளிர் அணி துணைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை