சினிமா செய்திகள்

பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து

பாலியல் தொல்லை குறித்து நடிகை அதிதிராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்தவர் அதிதிராவ். தற்போது உதயநிதியுடன் சைக்கோ படத்தில் நடிக்கிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் விசாகபட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும்போது படுக்கைக்கு சம்மதிக்காததால் பட வாய்ப்புகளை இழந்ததாக தெரிவித்தார்.