சினிமா செய்திகள்

அவதூறு கருத்து : நடிகை மீரா மிதுன் கைது

நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் , மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது

மேலும் மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4ம் தேதி ஆஜர்படுத்த ,மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது

இந்நிலையில் நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்

SCROLL FOR NEXT