சினிமா செய்திகள்

அதிதி பாலன் விரும்பும் கதாபாத்திரம்

தமிழில் அருவி படத்தில் நடித்து பிரபலமானவர் அதிதி பாலன். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தங்கர்பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன படம் மூலம் நடிக்க வந்துள்ளார்.

இதுகுறித்து அதிதிபாலன் அளித்துள்ள பேட்டியில், "நான் கருமேகங்கள் கலைகின்றன படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வருகிறேன். தங்கர் பச்சான் படங்களில் இருக்கும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள் இதிலும் இருக்கும். இதில் பாரதிராஜா நீதிபதியாகவும், கவுதம் மேனன் வக்கீலாகவும் வருகிறார்கள்.

எனக்கு இந்த படத்தில் நடிக்க நிறைய சுதந்திரம் கொடுத்தனர். வசனங்கள் பற்றி இயக்குனர் தெளிவாக விளக்கி சொன்னார். அருவி படத்துக்கு பிறகு அதே மாதிரியான சீரியஸ் கதாபாத்திரங்களே வந்தன. அந்த இமேஜை மாற்ற நினைத்தேன்.

அதோடு சாதாரணமாக வந்து போகும் கதாபாத்திரங்களில் நடிக்கவும் விரும்பவில்லை. அழுத்தமான நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.

இதனால் பட வாய்ப்புகள் குறைந்து இருக்கலாம் என்று கருதுகிறேன்.

கருமேகங்கள் கலைகின்றன படம் எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும்.

மலையாளத்தில் பிருதிவிராஜுடன் கோல்டு கேஸ், நிவின் பாலியுடன் படவெட்டு ஆகிய படங்களில் நடித்துள்ளேன்'' என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்