சினிமா செய்திகள்

அருள் நிதியின் புதிய படம்

தினத்தந்தி

அருள் நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு 'திருவின் குரல்' என்று பெயர் வைத்துள்ளனர். நாயகியாக ஆத்மிகா நடிக்கிறார். பாரதிராஜா, சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன், முல்லையரிசி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஹரிஷ் பிரபு டைரக்டு செய்து இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, புரியாத புதிர் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

படம் பற்றி அவர் கூறும்போது, ''கதாநாயகன் கதாபாத்திரம் பேச்சு குறைபாடு இருப்பவராக வடிவமைக்கப்பட்டு உள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே அழகான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை படம் பேசும். படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது'' என்றார். இசை: சாம்.சி.எஸ். ஒளிப்பதிவு: சிண்டோ போடுதாஸ். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை