சினிமா செய்திகள்

ஈஷா யோகா மைய மஹா சிவராத்திரி விழாவில் மனமுருகி வழிபட்ட பிரபலங்கள்

கண்ணீருடன் சிவனை மனமுருகி வழிபட்டார் நடிகர் சந்தானம்.

தினத்தந்தி

கோவை,

கோவை ஈஷா யோகா மையத்தில் 30-வது ஆண்டு மஹா சிவராத்திரி விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்றுள்ளார். இந்தநிலையில் நள்ளிரவு 12 மணி கடந்ததும் இரண்டாம் கால பூஜை தொடங்கியது. அது லிங்கோத்ர பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த பூஜையின் போது இறை நாமத்தை உச்சரித்தால் நன்மை கிடைக்கும். அந்தவகையில், ஓம் நமச்சிவாய என்று ஜக்கிவாசு தேவ் நாமத்தை உச்சரித்தார். அதனை தொடர்ந்து அங்கிருத்தவர்களும் இறை நாமத்தை உச்சரித்தனர். நமச்சிவாய.. நமச்சிவாய.. எனும் மந்திரத்துடன் தொடர்ந்து பிரார்த்தனையில் தமன்னா,நடிகர் சந்தானம்,நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்