சினிமா செய்திகள்

சாய்னா நேவாலுக்கு குறித்து சர்ச்சை கருத்து - நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சாய்னா நேவால் குறித்து சர்ச்சை கருத்து நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய மகளிர் ஆணணை டிஜிபிக்கு கடிதம் எழுதி உள்ளது.

தினத்தந்தி

சென்னை

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி பஞ்சாபிற்கு பயணம் மேற்கொண்டார்.

அவர் பெரோஸ்பூர் மாவட்டத்தில் நடைபெற விருந்த நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக பயண திட்டம் மாற்றப்பட்டது. அதன்படி அவர் சாலை வழியாக காரில் சென்றார். அவருடன் பாதுகாப்பு வாகன அணிவகுப்பும் சென்றது.

ஆனால் வழியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரதமர் கார் நிறுத்தப்பட்டது. வாகன அணிவகுப்பும் தொடர முடியவில்லை. 20 நிமிடங்கள் காத்திருந்தும் நிலையில் மாற்றம் இல்லை. இதனால் பிரதமர் மோடி அங்கிருந்து திரும்பினார். அவரது நிகழ்ச்சிகளும் ரத்தாகின. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி சூடுபிடித்து வருகிறது.

இதுக்குறித்து நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில், உண்மையில் பஞ்சாபில் இருந்த பிரதமரும் அவரது வாகனத் தொடரணியும் என்பது நமக்கு எப்படித் தெரியும்? அது காலிஸ்தானிகளாகவோ அல்லது வெளிநாட்டவர்களாகவோ அல்லது ஊதியம் பெறும் நடிகர்களாகவோ இருக்கலாம். 

அங்கு இருந்தது பிரதமர் தான் என்று எப்படி உறுதி செய்வது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு குறித்து கிண்டல் செய்யும் வகையில் டுவிட் செய்திருக்கும் நடிகர் சித்தார்த்துக்கு  பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கண்டனம் தெரிவித்து இருந்தார்.அதில் எந்த நாடும் தனது சொந்த பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை சாத்தியமான வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன் என கூறி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த சித்தார்த்  சர்ச்சையான கருத்தை தெரிவித்து இருந்தார். "உலகின் நுட்பமான சேவல் சாம்பியன். கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியா பாதுகாப்பாகத்தான் உள்ளது. வெட்கப்படுகிறோம்" என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

சிவசேனா ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி சித்தார்த்தின் இந்த டுவீட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் யாரும் பயன்படுத்த தகுதியற்ற மொழி. கருத்து வேறுபாடு எதுவாக இருந்தாலும், சொற்பொழிவில் நாகரீகம் இருக்க வேண்டும்" என கூறி உள்ளார். தற்போது இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த சித்தார்த், தரக்குறைவாக எதுவும் சொல்லப்படவில்லை என்று கூறியுள்ளார். அவமரியாதையாக எதுவும் நோக்கப்படவில்லை, சொல்லப்படவில்லை அல்லது தூண்டப்படவில்லை. காலம்," என்று அவர் டுவீட் செய்தார்.

இந்த டுவீட் தொடர்பாக சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "திருமதி சாய்னா நேவால் இடுகையில் நடிகர் சித்தார்த் டுவிட்டரில் ஆபாசமான கருத்துக்களைப் பயன்படுத்தி ஒரு இடுகையை தேசிய மகளிர் ஆணையம் கண்டுள்ளது. இந்த கருத்து பெண்களை அவமதிக்கும் மற்றும் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் ஒரு மூர்க்கத்தனமானது.

நடிகரின் இத்தகைய மோசமான மற்றும் பொருத்தமற்ற கருத்தை ஆணையம் கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து விசாரணையை எடுத்துள்ளது. தலைவி ரேகா சர்மா, இந்த விவகாரத்தை உடனடியாக விசாரித்து, சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யுமாறு மராட்டிய காவல்துறை இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆணையம் சமூக ஊடகங்களில் பெண்களை அநாகரீகமான வார்த்தைகளால் பயன்படுத்தியதற்காக அவர் மீது உடனடியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளது. சாய்னா நெய்வாலுக்கு எதிரான சர்ச்சை கருத்தை தொடர்ந்து "சித்தார்த் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தமிழக் டிஜிபிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு