சினிமா செய்திகள்

சந்தோஷத்தில் ''கூலி'' பட வில்லி...ரசிகர்களுக்கு சொன்ன முதல் வார்த்தை

கல்யாணி வேடத்திற்காக தனக்கு கிடைத்த பாராட்டுகளுக்கு ரச்சிதா நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

ரஜினிகாந்தின் ''கூலி'' படத்தில் ரச்சிதா ராமின் நடிப்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. கன்னடத்தில் கதாநாயகியாக நடித்து வரும்  அவர் இப்படத்தில் கல்யாணி என்ற வில்லி கதாபாத்திரத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், கல்யாணி வேடத்திற்காக தனக்கு கிடைத்த பாராட்டுகளுக்கு ரச்சிதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

''கூலி படத்தில் என்னுடைய கல்யாணி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு நம்பமுடியாத அளவிற்கு அருமையாக இருந்தது. அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டிரோல் செய்பவர்களுக்கும் மீம்ஸ் போடுபவர்களுக்கு நன்றி.

என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய லோகேஷ் கனகராஜிக்கு நன்றி. ஜாம்பவான்களுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. 'கூலி' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு படக்குழுவிற்கு வாழ்த்துகள்'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

View this post on Instagram

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு