சினிமா செய்திகள்

நடிகை பவித்ரா, தர்ஷனின் இரண்டாவது மனைவியா? - பதிலளித்த வழக்கறிஞர் அனில் பாபு

சமீபத்தில் நடிகை பவித்ரா, நடிகர் தர்ஷனின் இரண்டாவது மனைவி என்று தகவல்கள் வெளியாகின.

தினத்தந்தி

சென்னை,

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளால் படுகொலை செய்யப்பட்டார். தனது தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்களை அனுப்பியதால் நடிகர் தர்ஷனே ரேணுகாசாமியை கொடூரமாக தாக்கியதாகவும், அதில் அவர் இறந்துபோனதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 19 பேரும் பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடிகை பவித்ரா நடிகர் தர்ஷனின் இரண்டாவது மனைவி என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று தர்ஷனின் வழக்கறிஞர் அனில் பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,

பவித்ரா கவுடா தர்ஷனின் இரண்டாவது மனைவி என்பது முற்றிலும் தவறானது. அவர்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே. அவர்கள் இணை நட்சத்திரங்களாக இருந்தனர். இப்போதும் அவர்கள் ஒரு நட்பு உறவையே கொண்டிருக்கின்றனர். வேறு எதுவும் இல்லை. தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி மட்டும்தான். இவ்வாறு கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்