சினிமா செய்திகள்

விரைவில் 'தனி ஒருவன்' 2-ம் பாகம் உருவாகும் - நடிகர் ஜெயம் ரவி

ஜெயம் ரவி தனி ஒருவன் 2-ம் பாகம் விரைவில் உருவாகும் என்று தற்போது அறிவித்து உள்ளார்.

தினத்தந்தி

ஜெயம் ரவி நடித்த 'தனி ஒருவன்' படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் நாயகியாக நயன்தாரா நடித்து இருந்தார். அரவிந்தசாமி வில்லனாக வந்தார். ராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். ஜெயம் ரவியும் தனி ஒருவன் 2-ம் பாகம் உருவாகும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் பட வேலைகள் தொடங்கவில்லை.

ஜெயம் ரவி வேறு படங்களில் நடித்து வந்தார். ராஜாவும் தெலுங்கு படம் இயக்கினார். இதனால் தனி ஒருவன் 2 கைவிடப்பட்டு விட்டதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஜெயம் ரவி தனி ஒருவன் 2-ம் பாகம் விரைவில் உருவாகும் என்று தற்போது அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "தனி ஒருவன் 2-ம் பாகத்துக்கான கதை தயாராகிவிட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு முன்பே தனி ஒருவன் 2 படத்தை எடுக்க திட்டமிட்டோம். ஆனால் நானும், இயக்குனர் ராஜாவும் வேறு பணிகளில் இருந்ததால் தாமதமானது. விரைவில் தனி ஒருவன் 2 படம் உருவாகும்'' என்றார். இது ஜெயம் ரவி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்