சினிமா செய்திகள்

சினிமாவில் நடிக்க நயன்தாரா புதிய நிபந்தனைகள்

திருமணத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்க இயக்குனர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்க நயன்தாரா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

டைரக்டர் விக்னேஷ் சிவனை மணந்துள்ள நயன்தாரா திருப்பதி கோவில் மாட வீதிகளில் செருப்பு அணிந்து கணவருடன் போட்டோ ஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்து விட்டு சென்னை திரும்புகிறார்.

திருமணத்துக்கு பிறகு புதிய படங்களில் நடிக்க இயக்குனர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்க நயன்தாரா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கதாநாயகனுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பது இல்லை என்றும், நடிகர்கள் தன்னை தொட்டு நடிக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்க இருக்கிறாராம். சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்த ஜவான் இந்தி படத்திலும் காதல் காட்சிகளில் இருவரும் நெருங்காமல் தள்ளி நின்றே நடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்