நடிகை பாவனா, தான் சினிமாவை விட்டு விலக நினைத்ததாக தெரிவித்தார்.
தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பாவனா ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். பின்னர் கன்னட தயாரிப்பாளர் நவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.