சினிமா செய்திகள்

என் மனதுக்கு பிடித்தவர் கிடைத்தவுடன் 2-வது திருமணம் செய்து கொள்வேன்- விஜய் சேதுபதி பட நடிகை

தனது விவாகரத்து குறித்தும் மறுமணம் குறித்தும் நடிகை நிஹாரிகா பேட்டியில் கூறியுள்ளார்.

தினத்தந்தி

தமிழில் விஜய்சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்து பிரபலமானவர் நிஹாரிகா. தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு சைதன்யா என்பவரை திருமணம் செய்தார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த வருடம் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். புதிய தமிழ் படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் நிஹாரிகா 2-வது திருமணத்துக்கு தயாராவதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து நிஹாரிகா அளித்துள்ள பேட்டியில், "எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது. எனவே மீண்டும் திருமணம் செய்து கொள்வேன். என் மனதுக்கு பிடித்தவர் கிடைத்தவுடன் 2-வது திருமணம் செய்து கொள்வேன்'' என்றார்.

View this post on Instagram

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்