சினிமா செய்திகள்

போதைப் பொருள் வழக்கில் நடிகை ராகிணி திவேதிக்கு ஜாமீன்

கன்னட திரையுலகில் சில மாதங்களுக்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தினத்தந்தி

போதைப் பொருள் பயன்படுத்தும் கன்னட நடிகர் நடிகைகள் பெயர் பட்டியலை இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் போலீசாரிடம் வழங்கினார். இதையடுத்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேலும் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் கர்நாடக கோர்ட்டில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் சஞ்சனா கல்ராணி உடல்நிலை தொடர்பாக மேல்முறையீடு செய்து கடந்த மாதம் ஜாமீன் பெற்று 3 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

கர்நாடக கோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் ராகிணி திவேதி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் நேற்று விசாரித்து ராகிணி திவேதிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து