ஐதராபாத்,
பிரபல காமெடி நிகழ்ச்சியான ‘ஜபர்தஸ்த்’ மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா பேசுகையில்: "ஆரம்பத்தில் ‘கமிட்மென்ட்’ என்றால் வேலை மீதான அர்ப்பணிப்பு என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அதை தவறாக பயன்படுத்துவதை அறிந்தபோது கோபம் வந்தது.
ஒருமுறை என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற ஒரு இயக்குநருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் அவரை அடித்துவிட்டேன்," என்று கூறியுள்ளார். எனினும், அந்த இயக்குநரின் பெயரை அவர் வெளிப்படுத்தவில்லை.