டைரக்டர் செல்வராகவனும், நடிகர் தனுசும் அண்ணன்-தம்பி. இருவரும் டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் மகன்கள். செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய 4 படங்களில் தனுஷ் நடித்து இருக்கிறார்.
இவர்கள் கூட்டணியில், 5-வது படமாக நானே வருவேன் அமைந்து இருக்கிறது. செல்வராகவன்-தனுஷ் கூட்டணியில் ஏற்கனவே வந்த 4 படங்களும் வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மத்தியில், நானே வருவேன் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
பல வெற்றி படங்களை கொடுத்த எஸ்.தாணு, இந்த படத்தை தயாரிக்கிறார். படப் பிடிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்குகிறது.