சினிமா செய்திகள்

சிரஞ்சீவி படத்தில் நடிக்கிறேனா? - நடிகை மாளவிகா மோகனன் விளக்கம்

மாளவிகா தற்போது 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

சிரஞ்சீவியின் 158வது படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து இணையத்தில் ஏராளமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. பல வதந்திகள் பரவி வரும் நிலையில், மாளவிகா மோகனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறினார். இருப்பினும், சிரஞ்சீவியுடன் திரையைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்த அவர், இப்படத்தில் நடிப்பதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் விளக்கினார்.

இந்த படத்தை பாபி இயக்கவுள்ளார், இவர் முன்னதாக வால்டர் வீரய்யா படத்தை இயக்கியவர். மாளவிகா தற்போது 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்கும் இந்தப் படம் தமிழில் ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்