சினிமா செய்திகள்

ஆடி காரில் வந்து ஆட்டோவில் கிளம்பிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

அண்ணாசாலை தர்கா சந்தனக்கூடு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அண்ணா சாலையில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா காதிரி எனும் தர்கா அமைந்துள்ளது. சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் அமைந்துள்ள இந்த தர்காவில் மத வேறுபாடு இன்றி மக்கள் வந்து வழிபடுவது வழக்கம். இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு கந்தூரி மற்றும் ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெறும்.

இந்நிலையில் சென்னை அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் சிறப்பு பிரார்த்தனையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றார். அவரை காண அங்கு ரசிகர்கள் சூழ்ந்ததால் ஆடி காரில் வந்திருந்த அவர் கூட்ட நெரிசலால் சிக்கி தவித்தார். பின்பு கூட்டம் அதிகரித்ததால் அங்கிருந்த ஆட்டோவில் புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை