தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதும், 13 பேர் பலியானதும் நாட்டையே உலுக்கி எடுத்தது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். பாதித்த குடும்பங்களுக்கு அரசும் நிவாரண உதவிகள் அறிவித்து உள்ளது. நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினரும் இந்த சம்பவத்தை எதிர்த்து கருத்துக்கள் வெளியிட்டனர். போராட்டங்களும் நடத்தினர்.