சென்னை,
நடிகை பிரீத்தி முகுந்தன், தனது வருங்கால வாழ்க்கை துணையிடம் எதிர்பார்க்கும் முக்கிய குணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், " என் துணையிடம் நான் அதிகம் எதிர்பார்ப்பது அக்கறையைத்தான். என்னுடைய உணர்வுகளையும், எண்ணங்களையும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு நபர் எனக்கு துணையாக வர வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிரீத்தி முகுந்தன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான 'பிளாஸ்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபீஸில் சுமார் ரூ.76 கோடி வசூல் செய்தது. ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையடுத்து, நடிகர் அதர்வாவுடன் இணைந்து நடித்த 'இதயம் முரளி' திரைப்படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் தனது முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் பிரீத்தி நடித்துள்ளார்.