சினிமா செய்திகள்

திகில் கதையில் சரத்குமார்

தினத்தந்தி

பொன்னியின் செல்வன், வாரிசு, ருத்ரன் படங்களை தொடர்ந்து 'போர்த்தொழில்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இதில் அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை டைரக்டர் விக்னேஷ் ராஜா டைரக்டு செய்துள்ளார். இவரது இயக்கத்தில் வரும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் புலனாய்வு திரில்லர் கதையம்சத்தில் தயாராகிறது. படத்தை அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கிறது. ஏற்கனவே கன்னடத்தில் `ஹம்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ்' தமிழில் வதம், குருதிக்காலம், இரு துருவம், உள்ளிட்ட பல பிரபலமான இணையத் தொடர்களை இந்த பட நிறுவனம் தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு