சினிமா செய்திகள்

பாலியல் துன்புறுத்தல் வழக்கு; கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களில் டி.வி. நடிகருக்கு ஜாமீன்

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களில் டி.வி. நடிகர் பிராச்சீன் சவுகானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

இந்தியில் கசாத்தி ஜிந்தகி கே என்ற பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் நடிகர் பிராச்சீன் சவுகான். இந்நிலையில், இவர் மீது சிறுமி ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, சவுகானை போலீசார் கைது செய்தனர் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். இதன்பின் போரிவலி கோர்ட்டில் நடிகர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த நீதிமன்றம் நடிகருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களில் தொலைக்காட்சி நடிகர் பிராச்சீன் சவுகானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்