ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி எப்போதுமே பேஷனில் ஆர்வம் கொண்டவர் என்று நடிகை அமண்டா தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிட்னி தனது சொந்த லிங்கரி பிராண்டான ‘SYRN’-ஐ தொடங்கினார். இதைப் பற்றி அமண்டா, “அவருக்கு பேஷன் பற்றி நல்ல புரிதல் இருக்கிறது. இந்த முயற்சியிலும் அவர் வெற்றி பெறுவார்” என்று கூறினார்.
மேலும், திடீர் புகழ் ஒருவருக்கு சவாலாக இருக்கலாம் என்றும் அமண்டா தெரிவித்தார். அதிக கவனம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என கூறிய அவர், அதை சமாளிப்பது எளிதல்ல என்றும் கூறினார்.
ஆனால், சிட்னி எப்போதும் புன்னகையுடன் பணிக்கு வருவார் என்றும், எந்த சூழ்நிலையையும் அமைதியாக கையாளும் நல்ல மனம் கொண்டவர் என்றும் அமண்டா பாராட்டினார்.