சினிமா செய்திகள்

’அதனால் என் வாழ்க்கையே மாறியது’ - ஐஸ்வர்யா ராய்

மணிரத்னம் இயக்கிய 'இருவர்' படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் சினிமாவில் அறிமுகமானார்.

தினத்தந்தி

சென்னை,

சமீபத்தில் நடைபெற்ற ரெட் சீ திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார். இதில், தனது தொழில் பயணத்தை நினைவு கூர்ந்தார். 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றது தனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியதாக அவர் கூறினார்.

1994 ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் தற்செயலாக பங்கேற்றதாக கூறிய அவர், அதை வெறும் அழகுப் போட்டியாகக் கருதவில்லை எனவும் சர்வதேச அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பாகக் கருதியதாகவும் தெரிவித்தார்.

அந்தப் பட்டத்தை வென்ற பிறகு தனது வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டதாக ஐஸ்வர்யா கூறினார். அவர் பேசுகையில், "மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற பிறகு, இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'இருவர்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானேன். அதே ஆண்டு, பாலிவுட்டிலிருந்தும் வாய்ப்புகள் வந்தன. 'தேவதாஸ்' என் வாழ்க்கையில் ஒரு மைல்கல் போன்றது. அந்தப் படத்திற்குப் பிறகு, கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் எனக்கு முழுமையான தெளிவு கிடைத்தது," என்றார். ஐஸ்வர்யா ராய் கடைசியாக மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் நடித்திருந்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்