சினிமா செய்திகள்

டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்

டுவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் நன்றி கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் நடிகைகளின் டுவிட்டர் பக்கங்களை மர்ம நபர்கள் முடக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் டுவிட்டர் கணக்கை முடக்கினர். இதைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனின் டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது. இவர் போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது தன்னுடைய டுவிட்டர் கணக்கை விக்னேஷ் சிவன் மீட்டெடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னுடைய டுவிட்டர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. உண்மையைச் சொன்னால் கடந்த வாரம் மிகவும் அமைதியாக இருந்தது.

என் கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு நன்றி. அப்ப.. அப்ப.. பண்ணுங்க " என்று தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்