சினிமா செய்திகள்

’நாய்களை பாதுகாக்கத்தான் ஓட்டுப் போட்டோம்’ - நிவேதா பெத்துராஜ்

நாய்களுக்கு லைசென்ஸ் பெறுவதற்கு சென்னை மாநகராட்சி கட்டணம் வசூலிப்பதற்கு நிவேதா எதிர்ப்பு தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

நாய்களை பாதுகாக்கவே ஓட்டுப் போட்டோம் என நிவேதா பெத்துராஜ் கூறினார்.

தெருநாய்களை பாதுகாக்க கோரி விலங்குகளுக்கான சொர்க்கம் என்ற அரசுசாரா அமைப்பு சார்பில், புதுப்பேட்டையில் உள்ள லாங்ஸ் கார்டன் சாலையில் இருந்து ரமடா ஓட்டல் வரையில் நேற்று அமைதி பேரணி நடந்தது. இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டார்.

தெரு நாய்களுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியும், தெருநாய்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியும் பேரணியாக நடந்து சென்றனர்.

அப்போது நடிகை நிவேதா பெத்துராஜ் , தெரு நாய்களை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அதற்காகத்தான் வாக்களித்துள்ளோம் எனவும் கூறினார். நாய்களுக்கு லைசென்ஸ் பெறுவதற்கு சென்னை மாநகராட்சி கட்டணம் வசூலிப்பதற்கும், அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து