சினிமா செய்திகள்

உங்கள் அங்கீகாரம் என்னை சினிமாவில் சிறந்து விளங்க தூண்டுகிறது - தமிழக அரசுக்கு நடிகர் கவுதம் கார்த்திக் நன்றி

'வை ராஜா வை' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நடிகர் கவுதம் கார்த்திக் நன்றி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசு 2015-ம் ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் பட்டியலை கடந்த 4-ம் தேதி வெளியிட்டது. 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் 'வை ராஜா வை' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதை நடிகர் கவுதம் கார்த்திக் பெற்றார்.

இந்த நிலையில் விருது வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கவுதம் கார்த்திக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-

அன்புள்ள அனைவருக்கும். "வை ராஜா வை" திரைப்படத்தில் நான் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான (சிறப்பு பரிசு) தமிழ்நாடு அரசின் விருது வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மாநில அரசுக்கு: உங்கள் அங்கீகாரம் என்னை சினிமாத் துறையில் சிறந்து விளங்க தூண்டுகிறது. இந்த மதிப்புமிக்க அங்கீகாரத்திற்கு நன்றி.

எனது தயாரிப்பாளருக்கு, AGS என்டர்டெயின்மென்ட்: இந்த சிறந்த திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருக்க எனக்கு வாய்ப்பளித்ததற்கும், இதுபோன்ற அற்புதமான அனுபவத்தை எனக்கு வழங்கியதற்கும் நன்றி.

எனது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு: உங்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கை எனது கதாபாத்திரத்திற்கு திரையில் உயிர்ப்பிக்க உதவியாக இருந்தது. உங்கள் வழிகாட்டுதலுக்கும் அர்ப்பணிப்புக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது ரசிகர்கள் ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு: உங்கள் அனைவரின் ஆதரவு இல்லாமல் நான் இதை அடைந்திருக்க முடியாது. இந்த ஆதரவு இன்னும் என்னை கடினமாக உழைக்கவும், எனது படங்களில் உங்களை மகிழ்விக்க என்னால் முடிந்த அனைத்தையும் வழங்கவும் என்னை தூண்டுகிறது. நீங்கள் அனைவரும் தொடர்ந்து என்னை ஊக்குவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

மற்றும் மிக முக்கியமாக, எனது குடும்பத்திற்கு; நீங்கள் எனக்கு அளித்த அன்பு மற்றும் ஆதரவால் தான் இவ்விருது எனக்கு சாத்தியமானது. எனது வாழ்வின் கடினமான தருணங்களில் கூட எனக்கு பக்கபலமாக இருந்ததற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!

என்னுடன் இணைந்து விருதுகளை வென்ற சினிமாத்துறையைச் சேர்ந்த மற்ற சகாக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. கடவுளருளால் நலம் உண்டாகட்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை