சினிமா

சமூக வலைத்தளத்தில் அவதூறு பூனம் கவுர் போலீசில் புகார்

தன்னைப் பற்றி சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பப்பட்டு வருவதாக நடிகை பூனம் கவுர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

தமிழில் நெஞ்சிருக்கும்வரை, பயணம் என்வழி தனி வழி, 9 மெழுகுவர்த்திகள், அச்சாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூனம் கவுர். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். பூனம் கவுர் சில மாதங்களுக்கு முன்பு பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.