சமயபுரம், செப். 5-
சிறுகனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் கல்லூரில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அந்த மாணவி வீட்டு அருக நடந்து சென்றபோது, சி.ஆர்.பாளையம் நடுதெருவைச் சேர்ந்த தனசேகரன் (வயது 24) என்பவர் கிண்டல் செய்தாராம். இது குறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரனை கைது செய்தனர்.