மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவிலில் கம்யூனிஸ்டு நிர்வாகியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சூப்பிரண்டிடம், அனைத்துக் கட்சியினர் மனு

சங்கரன்கோவிலில் கம்யூனிஸ்டு நிர்வாகியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் சூப்பிரண்டிடம் அனைத்துக் கட்சியினர் மனு கொடுத்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் வீ.பழனி, கே.பழனி உள்ளிட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-