பெங்களூரு

மைசூரு அரண்மனையில் இசை நிகழ்ச்சிகள் ரத்து

தசரா விழா நடப்பதால் மைசூரு அரண்மனையில் இசை நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மைசூரு

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 15-ந்தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மைசூருவில் தீவிரமாக நடந்து வருகிறது. அரண்மனையில் சுத்தம் செய்யும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் மைசூரு அரண்மனையில் சுத்தம் செய்யும் பணி நடப்பதால், அரண்மனையில் நடந்து வந்த இசை நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மைசூரு தசரா நடக்க உள்ளதால் வருகிற 31-ந்தேதி வரை இந்த இசை நிகழ்ச்சி நடக்காது என்று மைசூரு அரண்மனை மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. தசரா விழா முடிவடைந்த பிறகு இசை நிகழ்ச்சி மீண்டும் தொடங்கி நடக்கும் என தெரிகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்