மாவட்ட செய்திகள்

அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஓட்டெடுப்பை உடனே நடத்த கவர்னர் பரிந்துரை கர்நாடக சட்டசபையில் கடும் அமளி சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

கர்நாடக சட்டசபையில் அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடைபெற்றது.

பெங்களூரு,

இதற்கிடையே ஓட்டெடுப்பை உடனே நடத்த கவர்னர் பரிந்துரைத்ததால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் சபையை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்தி வைத்தார். சபை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கூடுகிறது.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது.