அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6,573 ஆக உயர்ந்துள்ளது. இதில் 54 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 5,895 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 624 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.